Mon. May 6th, 2024

தும்பளை புனித லூர்து அன்னையின் யாத்திரைத் திருத்தல திருவிழா

பருத்தித்துறை, தும்பளை புனித லூர்து அன்னையின் யாத்திரைத் திருத்தல திருவிழா நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. பருத்தித்துறை பங்குத் தந்தையும், மறைக்கோட்ட முதல்வரும் திருத்தல பரிபாலகருமாகிய அருட்பணி A.F.பெனற் அடிகளாரின் தலைமையில் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ளது. தினமும் பிற்பகல் 4.30 மணிக்கு திருச்செபமாலையுடன் நவநாள் வழிபாடுகள் நடைபெறும்.
10ம் திகதி சனிக்கிழமை மாலை வழிபாட்டில் திவ்விய நற்கருணை விழாத் திருப்பலியும், ஆராதனையும், பவனியும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணியாளர் P.J.ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் இடம்பெறவுள்ளது.11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 05.30 மணிக்கும், 07.00 மணிக்கும் திருவிழாத் திருப்பலிகள் ஒப்புக் கொடுக்கப்படும். 07.00 மணிக்கு நடைபெறும் திருவிழாத் திருப்பலியை யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமை தாங்கி ஒப்புக் கொடுப்பார். திருப்பலியின் நிறைவில் புனித லூர்து அன்னையின் திருச்சொருபப் பவனியும் ஆசீரும் இடம்பெறும் என
திருத்தல பரிபாலகர் சபையினர் அறிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்