Wed. May 8th, 2024

தேசிய மட்ட பட்மின்ரன் போட்டி யாழ் வீரர்களுக்கு வெள்ளிப் பதக்கம்

அகில இலங்கை தேசிய மட்ட பட்மின்ரன் போட்டியில் யாழ் வீரர்கள் வெள்ளிப் பதக்கத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

40வயதிற்கு மேற்பட்டோருக்கான

அகில இலங்கை தேசிய மட்ட பட்மின்ரன் இரட்டையர் ஆட்டத்திற்கான போட்டி நுவரேலியா உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தில் இருக்கும் தென்னிலங்கை வீரர்களை எதிர்த்து யாழ் மாவட்ட வீரர்களான காண்டீபன் மற்றும் அன்ரனி ஆகியோர் மோதினர்.
இதில் முதலாவது செற்றில் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யாழ் மாவட்ட வீரர்கள் 21:14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஆனால் அடுத்த இரண்டு செற்களிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னிலங்கை வீரர்கள் 21:19, 21:17 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்