Sat. May 18th, 2024

வடமாகாண பாடசாலைகளில் சிறு திருத்த வேலைக்காக 179 லட்சத்து 32 ஆயிரத்து எழுநூறு ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது

வடமாகாண பாடசாலைகளில் சிறு திருத்த வேலைக்காக 179 லட்சத்து 32 ஆயிரத்து எழுநூறு ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக  வடமாகாண கல்வி பணிப்பாளர் தி.ஜோண்குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் கிளிநொச்சி தெற்கு, வலிகாமம், முல்லைத்தீவு, தீவகம் கல்வி வலயங்களுக்கே குறித்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதில் கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்கு 64 லட்சத்து 20 ஆயிரம் ரூபாவும், வலிகாமம் கல்வி வலயத்திற்கு 34 லட்சத்து 17 ஆயிரத்து 700 ரூபாவும், முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு 34 லட்சத்து 40 ஆயிரம் ரூபாவும், தீவகம் கல்வி வலயத்திற்கு 46 லட்சத்து 55 ஆயிரம் ரூபாவுமாக மொத்தமாக 179 லட்சத்து 32 ஆயிரத்து எழுநூறு ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் ஒவ்வொரு வலயத்திலும் பாடசாலைகளுக்கும் பகர்ந்தளிக்கப்பட வேண்டிய நிதி தொடர்பான விபரங்கள் குறித்த வலயங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்