துடுப்பாட்ட மற்றும் கால்பந்தாட்ட மைதான திறப்பு விழா
துடுப்பாட்ட மற்றும் கால்பந்தாட்ட மைதான திறப்பு விழாவும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5 மணிக்கு வடமாகாண விளையாட்டு கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
வடமாகாண விளையாட்டு கல்லூரி பணிப்பாளர் கே.சசிகுமார் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ் பல்கலைக்கழக உடற்கல்வி அலகின் பணிப்பாளர் கே.கணேசநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினராக இலங்கை துடுப்பாட்ட கனிஷ்ட தெரிவாளர் ஏ.எஸ்.நிஷாந்தன், கெளரவ விருந்தினராக ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் என்.துஸ்யந்தன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.