Sat. Apr 27th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1950-11-15

தோற்றம்

15 November, 1950

மறைவு

30 October, 2023

அமரர்.பாலசிங்கம் வெற்றிவேல்(ஓய்வுநிலை அதிபர் யா/கொற்றாவத்தை அ.த.க.பாடசாலை) (வயது : 73)

பிறந்த இடம்
அல்வாய் தெற்கு சாரதா
வாழ்ந்த இடம்
அல்வாய் தெற்கு ரதிமஹால்

மறைவு

2023-10-30

அல்வாய் தெற்கு சாரதாவைப் பிறப்பிடமாகவும்,  அல்வாய் தெற்கு ரதிமஹாலை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் வெற்றிவேல் அவர்கள் இன்று (30.10.2023) திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் சாரதாமணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை தங்கப்பொன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,  ரதியின் அன்புக் கணவரும்,  லி.நிருத்திகா (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், பிரதேச சபை பருத்தித்துறை), வெற்றிதுஸ்யந்தன் (ஊடகவியலாளர்), வெற்றிசிந்துஜன் (நுண்கலைமாணி), ஆகியோரின் பாசமிகு தந்தையும், லிங்கனதாஸ் (அதிபர் யா/இமையாணன் அ.த.க. வித்தியாலயம்), தாட்சாஜினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேசசபை கரவெட்டி), விஜயசாந்தி (நுண்கலைமாணி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,  ஆருஷா, ஆகர்ஷன்,  வைஸ்ணுபிரபாஸ், ஆகியோரின் பாசமிகு பேரனும்,  விஜயநாதன் – சாரதாவதி, தர்மரத்தினம் -கலாவதி, மணிவர்ணன் (ஓய்வுநிலை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்) ஆகியோரின் சகோதரரும்,  ந.துரைராஜா (சமாதான நீதவான், ஓய்வுநிலை விவாக பதிவாளர்) அவர்களின் சகலனும்,  விக்னேஸ்வரன் (லண்டன்), காலஞ்சென்றவர்களான தவமலர், விஜயநாதன் (ஓய்வுநிலை அதிபர்), தர்மரத்தினம் (முன்னாள் சாலை பரிசோதகர் இ.போ.ச.பருத்தித்துறை) மற்றும் ம.சுசிகலா (ஓய்வுநிலை ஆசிரியர்) ஆகியோரின் மைத்துனரும்,  வி.செந்தூரன்,  (பீடாதிபதி தகவல் தொழில்நுட்ப பீடம் பல்கலைக்கழகம் வவுனியா) வி.குமரன் பொறியியலாளர் லண்டன்), வி.துவாரகன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் கரவெட்டி) ஆகியோரின் மாமனாரும்,  து.ரமேஸ் (பொறியியலாளர் கனடா), து.சுரேஸ் (கனடா),  து.சதீஸ் (பொறியியலாளர் கனடா) பத்மராஜன் -மேகலா,  ஆகியோரின் சிறிய தந்தையும்,  அ.கீர்த்தனா (சிங்கப்பூர்) ம.ஆராதனா (சினமன் குளோபல் யாழ்ப்பாணம்) கேசவன் (உத்தியோகத்தர் இலங்கை வங்கி ) ஆகியோரின் பெரிய தந்தையும்,  க.சுதர்சனா (கனடா), க.சங்கீதா (சுவிஸ்) க.சுரேஸ் (சுவிஸ்), அ.பிரியந்தி (ஜேர்மனி), துஸ்யந்தி (ஜேர்மனி) , சு.உதயந்தி (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யாழ்ப்பாணம்) ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக் கிரியைகள் நாளை (31.10.2023) செவ்வாய்க்கிழமை மதியம் 1மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக அல்வாய் பங்குவேம்படி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.  இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 
தகவல்
குடும்பத்தினர்
Share This:

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்

பிரிவுத்துயர் பகிர்வு