Sat. May 4th, 2024

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு 10ம் கட்டை பகுதியில் வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் கிருஸ்ணன் கிருஸ்ணராசா எனும் 52 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த குடும்பஸ்தர் குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்