கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு
வடமாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வலம்புரி விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வு வடமாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர்.பி.சக்திக்குமரன் தலைமையில் நடைபெற்றது.
மேலும் 2024 ம் ஆண்டுக்குரிய செயற்குழு தெரிவு இடம்பெற்றதோடு வடமாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக வைத்தியர்.எம்.முரளிதாஸ் அவர்களும் புதிய செயலாளராக வைத்தியர்.எஸ்.சுகிர்தன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஸ்தாபகர் வைத்தியர். ஏ.சக்திவேல் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக தாய்ச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர்.என்.ரி.ஹேவாகமகே, உபதலைவர் வைத்தியர். ஜெ.ஏ.எஸ்.சாமர ஆகியோரும் கலந்து கொண்டனர்.