Sun. May 19th, 2024

உடுப்பிட்டி வீதியில் தொலைத்தொடர்பு வயர் அறுந்து கம்பம் முறிந்து வீழ்ந்தது

வீதிக்கு குறுக்காக இருந்த தொலைத்தொடர்பு வயர் அறுந்து விபத்து நடந்ததில் சுமார் ஒரு மணிநேரம் வீதி போக்குவரத்து தடைபட்டது.

வடமராட்சி உடுப்பிட்டி வீதியில் இமையாணன் வீதிக்கு திரும்பும் சந்தியிலேயே இவ் விபத்து நடைபெற்றுள்ளது.
இன்று திங்கட்கிழமை மதியம் 2.30 மணியளவில் குறித்த வீதியூடாக வீதி வேலைகளில் ஈடுபடும் வாகனம் செல்லும் போது வீதியின் குறுக்காக மேல் பகுதியில் பொருத்தப்பட்ட தொலைத்தொடர்பு வயர் சிக்குண்டு அறுந்தது. இதில் தொலைத்தொடர்பு கம்பம் முறிந்து வீதியின் குறுக்காக விழுந்துள்ளது. குறித்த வாகனம் பின்னால் எவரும் வருகை தராததால் உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை. இதனால் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடைபட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்