ஊடகவியலாளர் ‘தராக்கி’ சிவராம் அவர்களின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு
ஊடகவியலாளர் ‘தராக்கி’ சிவராம் அவர்களின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு பருத்தித்துறை வி.எம்.வீதியில் உள்ள வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெறவுள்ளது.
வடமராட்சி ஊடக இல்லத்தின் தலைவர் கு. மகாலிங்கம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், வடமராட்சி ஊடகவியலாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.