வடமாகாண பண்ணிசை போட்டியில் இமையாணன் மாணவி முதலிடம்
அகில இலங்கை கர்நாடக சங்கீத பண்ணிசைப் போட்டியில் இமையாணன் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலய மாணவி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கர்நாடக சங்கீத போட்டி கடந்த 26ம் திகதி நடைபெற்றது.
இதில் இமையாணன் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலய மாணவி விஜயசங்கர் விஷானுகா மாகாணமட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகி உள்ளார்.