Fri. Apr 26th, 2024

தேசிய மட்ட கபடி கிளிநெச்சி பாடசாலைகள் சாதிப்பு

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான தேசிய மட்ட கபடிப் போட்டியில் கிளிநொச்சி சிவநகர் அ.த.க. பாடசாலை அணி சம்பியன் கிண்ணத்தையும்,  கிளிநொச்சி புனித பற்றிமா றோ.க.த. பாடசாலை அணி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட போட்டிகள் கேகாலையில் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற 17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இறுதியாட்டத்தில் வடமாகாண கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளான கிளிநொச்சி அ.த.க.பாடசாலை அணியை எதிர்த்து கிளிநொச்சி புனித பற்றிமா றோ.க.த. பாடசாலை அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதனை நிருபிக்கும் விளையாடிக் கொண்டிருந்தனர். இருப்பினும் சிவநகர் அ.த.க பாடசாலை அணி 22:17 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்