Sat. May 4th, 2024

வவுனியாவில் மூன்று வாகனங்கள் விபத்து ஒருவர் பலி

வவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளமையுடன் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்துச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விபத்தில் சிகிச்சை பலனின்றி  இன்று திங்கட்கிழமை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் துரைசாமி லலிதராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
வான், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்றும் வவுனியா பட்டானிச்சூர் வீதியில் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்