நெல்லியடி பாலர் பாடசாலையின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் விழா
நெல்லியடி சன சமூக நிலைய பாலர் பாடசாலையின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் விழா எதிர்வரும் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பாடசாலை முன்றலில் நடைபெறவுள்ளது.
ஓய்வு நிலை அதிபரும் நிலையத் தலைவருமான கி.கிருஷ்ணாகரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி வைத்தியர் க.உமாசுதன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுநிலை ஆசிரியர் சு.கிருஸ்ணராஜா, நெல்லியடி கிராம சேவகர் சோ.ரமேஸ் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.