Sat. May 4th, 2024

கொற்றாவத்தையில் 6 லட்சம் பெறுமதியான மின் வயர்கள் களவாடப்பட்டுள்ளது

கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழக மைதானத்தில் பொருத்தப்பட்ட மின் வயர்கள் வெட்டி எடுக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் றேஞ்சஸ் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட போட்டிகளை மின்னொளியில் நடாத்தி தற்போது அரையிறுதி போட்டிகளை நடாத்தி எதிர்வரும் கிழமையில் இறுதிப் போட்டியை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மைதானத்தில் மின்னொளிக்கான வயர்களை சில விஷமிகளால் அறுக்கப்பட்டு அவை களவாடப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. களவாடப்பட்டுள்ள வயர்களின் பெறுமதி சுமார் 6 லட்சம் ரூபா எனவும் றேஞ்சஸ் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்