Fri. Apr 26th, 2024

தேசிய மட்ட எறிபந்தாட்ட போட்டியில் வடமாகாணத்தில் இருந்து 2 நடுவர்கள்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான ஆண்கள் பெண்களுக்கான தேசிய மட்ட எறிபந்தாட்ட போட்டியில் இம்முறை இரண்டு நடுவர்கள் வடமாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எறிபந்தாட்ட சம்மேளனத்தின் பரீட்சையில் சித்தியடைந்தமையால் இவர்களுக்கான இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் கனகராஜா மற்றும் வல்வெட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் ஜசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் இலங்கை பாடசாலைகள் எறிபந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட எறிபந்தாட்ட போட்டியில் நடுவராக கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்