மைக்கல் நேசக்கரம் ஊடாக சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
கிளிநொச்சியில் மைக்கல் நேசக்கரம் ஊடாக வயோதிப பெண் ஒருவருக்கு சக்கரநாற்காலி நேற்று வழங்கி வைக்கப்பட்டது.
கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் அங்கவீனமான நிலையில் சக்கரநாற்காலியின்றி சிறு குடிசையில் நீண்டகாலமாக பல துயரங்களை எதிர்கொண்டு வந்த வயோதிப பெண்ணுக்கே சக்கார நாற்காலி வழங்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ல.அனுரகாந்தன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக சக்கரநாற்காலி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.