காரைநகர் அரச ஊழியர்கள் வேண்டுகோள்
காரைநகர் அரச நிறுவனங்களில் கடமையாற்றும் அரச உத்த்தியோகத்தர்களை தெரிவின் அடிப்படையில் பணிக்கு அழைக்குமாறு அப்பகுதி அரச உத்தியோகத்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் அபிவிருத்தி அலுவலகருக்கும், அபிவிருத்தி அலுவல பயிலுநருக்குமென இருவருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இன்று காரைநகா் பிரதேச செயலகத்தில் உள்ள சகல பணியாளர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காரைநகர் பகுதியில் உள்ள ஏனைய அரசாங்க நிறுவன பணியாளர்களும் காரைநகாில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் காரைநகர் அரச நிறுவனங்களில்
கடமையாற்றும் அலுவலர்களும் கடமை செய்ய அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால் காரைநகர் பகுதியில் இயங்கும் அரச நிறுவனங்களில் பணியாற்றும் அரச ஊழியர்களை வாரத்தில் ஒரு நாளைக்கு கடமையில் ஈடுபட அனுமதிக்குமாறும், இது தொடர்பாக அரசாங்க அதிபரை கோாியுள்ளதாக
தொிவி க்கப்படுகின்றது.