பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு வருகை தந்தவருக்கு கொரோனா
பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு வருகை தந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று குடமியன் வரணியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த 27 ம் திகதி பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் அவருடன் தொடர்புபட்ட சிலர் தனிமைப்படுத்தி வைக்கப்படவுள்ளனர்.