Sat. May 18th, 2024

யாழ் மாவட்டத்தில் 14 பேர் உட்பட 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

யாழ் மாவட்டத்தில் 14பேர் உட்பட இன்று வியாழக்கிழமை வடமாகாணத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீடத்தில்760 பேருக்கு  மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாழ் மாவட்டத்தில் 14 பேருக்கும்,  வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த  மூவருக்கும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கு தலா ஒவ்வொருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் திருகோணமலையில் இருந்து வருகை தந்த  கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆசிரியை ஒருவருக்கும், கோப்பாய் சுகாதார பிரிவில் தொற்றாளருடன் நேரடித் தொடர்பு கொண்ட நால்வருக்கும், கொடிகாமம் வியாபாரிகளுக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொடிகாமம் சந்தை வியாபாரிகள் இருவருக்கும் வர்த்தகர்கள் இருவருக்கும்,  நல்லூர் சுகாதார பிரிவில் நேரடித் தொடர்பு கொண்ட இருவருக்கும்,  கண்டியில் இருந்து வருகை தந்த யாழ் பல்கலைக்கழக சட்டக் கல்லூரி மாணவிக்கும், தெல்லிப்பளை சுகாதார பிரிவில் கே.கே.எஸ். பொலீஸ் அதிகாரி ஒருவருக்கும்,  சாவகச்சேரி வெளிநோயாளர் பிரிவில் ஒருவருக்கும்,  வவுனியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் பிரிவில் இருவருக்கும்,  நேரடித் தொடர்பு கொண்ட ஒருவருக்கும்,  கிளிநொச்சி வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் பிரிவில் ஒருவருக்கும்,  மாங்குளம் வைத்தியசாலையில் விடுதியில் தங்கியிருந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்