நெல்லியடியில் முக கவசம் அணியாதோருக்கு தண்டப்பணம்
29.04.2021.இன்று நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி கோனாரா தலைமையில் நெல்லியடி நகரப்பகுதியில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நெல்லியடி நகரப்பகுதியில் முக கவசம் அணிந்து வராதவர்கள் கடுமையான எச்சரிக்கையுடன்பத்தாயிரம் ரூபாய்குற்ற பணம் செலுத்துமாறு 15 பேருக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முகக் கவசம் அணிந்து செல்லுமாறு பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக அறிவுறுத்தல் வழங்கினார்கள். முகக் கவசம் இல்லாமல் வருபவர்களை நீண்ட வரிசையில் நிறுத்தி முகக் கவசம் அணிவித்து அவர்களுக்கான சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பொறுப்பு அதிகாரியினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன