Mon. May 6th, 2024

கூட்டமைப்பின் பதிவு அவசியம் இல்லை!! -மாவை எம்.பி விடாப்பிடி-

தமிழ் தேசியக் கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்யும் அவசியம் ஏற்படவில்லை என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை மாலை செய்தியாளர் சந்திப்பு நடந்தது.

இதில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பங்காளி கட்சிகளை இணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று கட்சி பதிவு மேற்கொள்ளுமாக பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன, மேற்படி கோரிக்கை தொடர்பில் மன்னார் மாவட்டத்தில் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்திவருகின்றார்.

கட்சி பதிவு தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

இக் கேள்வி தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் ஊடகப் பேச்சாளர்கள் பதில் கூறவில்லை.

இருப்பினும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பதில் கூறுகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள பங்காளி கட்சிகளுடன் பேசித்தான் சில விடயங்களை முன்நகர்த்தி வருகின்றோம்.

எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்யும் அவசியம் தற்போது ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்