கோர விபத்து!! -16 பேர் படுகாயம்-
கட்டுநாயக்க ஏவரியவத்த பிரதான வீதி ஹீனடியன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்து 16 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெப் ரக வாகனம் ஒன்று மின் கம்பம் ஒன்றுடன் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.