குப்பையை எரித்த பெண் மரணம்
குப்பையை எரிக்கச் சென்ற பெண் தீயினால் எரிகாயங்களுக்குட்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கல்வியங்காட்டைச் சேர்ந்த சஜீவன் தர்சிகா (வயது 28) இரு பிள்ளைகளின் தாயாரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 20ம் திகதி குப்பை எரிப்பதற்காக மண்ணெண்ணெய் கலனுடன் சென்று குப்பையை எரிக்கும் போது தவறுதலாக உடலில் பட்டதில் எரிகாயங்களுகுட்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.