ஓடைக்கரையில் 7 பேருக்கு கொரோனா
பருத்தித்துறை சுகாதார பிரிவில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பருத்தித்துறை ஓடைக்கரைப் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் நேரடித் தொடர்பு கொண்ட 7 பேருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.