மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம்
மன்னார் தாழ்வுப்பாடு கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலீஸ் பிரிவிற்குட்பட்ட தாழ்வுப்பாடு கடற்கரையில் நேற்று மாலை சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக பொலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று குறித்த பகுதிக்குச் சென்ற பொலீஸார் மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனர்.