இரணைமடுவில் ஆணின் சடலம் மீட்பு
கிளிநொச்சி டீ3 கோவிந்தன் கடைச் சந்தி, இரணைமடு நீர்ப்பாச வாய்க்காலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி திருவையாறு வில்சன் வீதியைச் சேர்ந்த கே.ரவிக்குமார் (வயது 30) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் தனியார் வீதி அபிவிருத்தி நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர் எனவும் குறித்த நபர் நேற்று குளிக்கச் சென்ற போது இவ்விபத்து நடைபெற்றிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. பொலீஸார் சடலத்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.