Mon. May 6th, 2024

எரிவாயு கிடைக்காத பொதுமகன் வாகன சில்லுக்குள் படுத்துப் போராட்டம்

சமையல் எரிவாயு வழங்குதல் தொடர்பாக பொதுமக்கள் எரிவாயுவை ஏற்றிவந்த வாகனத்தின் சில்லுக்குள் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை உடுப்பிட்டி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
இன்று  சமையல் எரிவாயு வாகனம் உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு எரிவாயுவை வழங்கியுள்ளது. இதையறிந்த பொதுமகன் ஒருவர் தமக்கான எரிவாயுவை வழங்காது வாகனத்தை எடுப்பதற்கு அனுமதி வழங்க மாட்டேன் எனக் கூறி வாகனத்தின் சில்லுக்குள் படுத்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதனையடுத்து பல மக்கள் ஒன்று கூடி பலரும்  தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர். இதனையடுத்து குறித்த பகுதிக்கு வந்த பொலீஸார் முகாமையாளர் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் முகாமையாளரால் பொதுமக்கள் 30 பேருக்கான பெயர் விபரம் எடுக்கப்பட்டு நாளை  சமையல் எரிவாயு   வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கலைந்து சென்றனர்.
குறித்த பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் பல தடவைகள் சமையல் எரிவாயு வழங்கப்பட்ட போதிலும் அதனைப் பொதுமக்களுக்கு வழங்காது தமது ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாக அறிந்தே இன்று  பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்