நூதனமான முறையில் கொள்ளைகள் மக்கள் அவதானம்
யாழ் நகர்புற பகுதியில் தங்கையின் புகைப்படத்தை பேர்ஸில் வைத்திருப்பதாக கூறி விசாரணை நடாத்தி அவர்களிடமிருந்து பணம் மற்றும் அலைபேசிகளை கொள்ளையிட்டு வந்த குழுவில் இருவரை யாழ் பொலீஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று பழைய பூங்கா பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவரை இருவர் வழிமறித்து தமது சகோதரியின் புகைப்படத்தை உமது பேர்ஸில் வைத்திருப்பதாக கூறி விசாரணை நடாத்தி அவரிடம் இருந்த 6 ஆயிரம் ரூபாயையும், அலைபேசியையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து விசாரணைகளை முடுக்கிவிட்ட புலனாய்வு பிரிவினரால் 22 மற்றும் 24 வயதுடைய இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கடந்த கிழமையும் யாழ் நகர்புற பகுதியில் இவ்வாறான 3 சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.