Mon. May 6th, 2024

இராணுவத்தினரால் வீட்டிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

இராணுவத்தினரால் வீட்டுத்திட்டத்திற்கு புலோலியில் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.
பருத்தித்துறை புலோலி வடக்கில் குறைந்த வருமானம் பெறும் குடும்பம் ஒன்றிற்கு  இராணுவத்தினரால் கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர் விஸ் நடராசாவின் ரூபா 17 இலட்சம் நிதி உதவியின் கீழ் திரு திருமதி  தங்கராசா தர்மாராணி குடும்பதினருக்கு  வீடு ஒன்றினை கட்டிக் கொடுப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல்  நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
அடிக்கல்லினை 551 ஆவது காலாட்படை படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சிந்தக விக்ரமசிங்க, பருத்தித்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர், பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் நாட்டிவைத்தனர். இதில்  இலங்கை இலகு காலாட்படையின் 16 ஆவது படைணியினர், பருத்தித்துறை பிரதேச செயலக அதிகாரிகள், பயனாளி குடும்பம மற்றும் பலரும் கலந்து கொண்டனர.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்