இன்று 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இன்று யாழ் மாவட்டத்தில் 58 பேர் உட்பட 74 பேருக்கு வடமாகாணத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
இன்று 853 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வடமாகாணத்தில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் 58, கிளிநொச்சி மாவட்டத்தில் 8, வவுனியா மாவட்டத்தில் 3, முல்லைத்தீவு மாவட்டத்தில் 3, மன்னார் மாவட்டத்தில் 2 பேர் உட்பட 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் யாழ் வைத்தியசாலையில் 6, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6, சாவகச்சேரி வைத்தியசாலையில் 5, தெல்லிப்பளை ஒருவருக்கும்
சுகாதார பிரிவில்
தெல்லிப்பளை தையிட்டி பகுதியில் நடைபெற்ற திருமண வைபவத்தில் 21, யாழ் சுகாதார பிரிவில் நேரடித் தொடர்பு கொண்ட 7 பேருக்கும், கரவெட்டி சுகாதார பிரிவில் பேக்கரியில் 11 பேருக்கும் யாழ் சிறைச்சாலையில் ஒருவருக்கும் என தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.