இன்று 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இன்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்டத்தில் 29 பேர் உட்பட 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீடத்தில் 644 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் யாழ் மாவட்டத்தில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் யாழ் சுகாதார பிரிவில் பொலீஸ் உத்தியோகத்தர்கள் 8, வங்கி ஊழியர் ஒருவர், hotel ஒருவர், நேரடித் தொடர்பு கொண்ட 3 பேர் என 13 பேருக்கும், உடுவில் சுகாதார பிரிவில் சுன்னாகம் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர், மின்சார சபை ஊழியர் ஒருவர், பிஸ்கட் வழங்கும் இருவர் உட்பட நான்கு பேருக்கும், தெல்லிப்பளை சுகாதார பிரிவில் நேரடித் தொடர்பு கொண்ட மூவருக்கும், சாவகச்சேரி சுகாதார பிரிவில் நேரடித் தொடர்பு கொண்ட 5 பேருக்கும், யாழ் போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் பிரிவில் இருவருக்கும், யாழ் சிறைச்சாலையில் இருவருக்கும் என 29 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மன்னார் போதனா வைத்தியசாலையில் மூவருக்கும், வங்கி ஊழியர் ஒருவர், மின்சார சபை ஊழியர் ஒருவர் உட்பட 5 பேருக்கும்,
வவுனியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் பிரிவில் ஒருவருக்கும், நேரடித் தொடர்பு கொண்ட ஒருவருக்கும் என இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.