இந்தியாவில் இருந்து படகு மூலம் யாழ் வரும் இலங்கையர்கள்
இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு பயணித்து, யாழ்ப்பாணத்தின் குருநகரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
மே 6 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் மன்னாருக்கு திரும்பியதாகவும் பின்னர் படகு மூலம் யாழ்ப்பாணம் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த குழுவில் 61 வயது பெண், அவரது 34 வயது மகள் மற்றும் அவரது 9 மற்றும் 5 வயது குழந்தைகள் அடங்குவர்.
அவர்கள் ஒரே வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்