Tue. May 7th, 2024

இன்று புதன்கிழமை 82 பேருக்கு கொரோனா

வடமாகாணத்தில் இன்று புதன்கிழமை 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் 67 பேருக்கும்,  முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 பேருக்கும்,  வவுனியா மாவட்டத்தில் 4 பேருக்கும்,  கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பேருக்கும் என 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் யாழ் மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் 12 பேருக்கும், பருத்தித்துறை வைத்தியசாலையில் 9 பேருக்கும்,  தெல்லிப்பளை மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலைகளில் தலா 3 பேருக்கும்,  அச்சுவேலி மற்றும் கோப்பாய் வைத்தியசாலைகளில் தலா ஒருவருக்கும்,
சுகாதார வைத்தியசாலை பிரிவில்
சாவகச்சேரியில் 10 பேருக்கும்,  சங்கானையில் 8 பேருக்கும்,  கோப்பாயில் 7 பேருக்கும்,  உடுவிலில் 3 பேருக்கும்,  சண்டிலிப்பாயில் 2, நல்லூரில் ஒருவர் மற்றும் யாழ் சிறைச்சாலையில் 7 பேருக்கும் என 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீல் 8 பேரில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒருவர், ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில்  5 பேருக்கும்,  மல்லாவி மற்றும் ஒட்டுசுட்டான் வைத்தியசாலைகளில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் வவுனியா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் பிரிவில் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் நேரடித் தொடர்பு கொண்ட  கிளிநொச்சி வைத்தியசாலையில் இருவருக்கும்,  தருமபுரம் வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்