இன்று புதன்கிழமை 82 பேருக்கு கொரோனா
வடமாகாணத்தில் இன்று புதன்கிழமை 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் 67 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 4 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பேருக்கும் என 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் யாழ் மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் 12 பேருக்கும், பருத்தித்துறை வைத்தியசாலையில் 9 பேருக்கும், தெல்லிப்பளை மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலைகளில் தலா 3 பேருக்கும், அச்சுவேலி மற்றும் கோப்பாய் வைத்தியசாலைகளில் தலா ஒருவருக்கும்,
சுகாதார வைத்தியசாலை பிரிவில்
சாவகச்சேரியில் 10 பேருக்கும், சங்கானையில் 8 பேருக்கும், கோப்பாயில் 7 பேருக்கும், உடுவிலில் 3 பேருக்கும், சண்டிலிப்பாயில் 2, நல்லூரில் ஒருவர் மற்றும் யாழ் சிறைச்சாலையில் 7 பேருக்கும் என 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீல் 8 பேரில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒருவர், ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் 5 பேருக்கும், மல்லாவி மற்றும் ஒட்டுசுட்டான் வைத்தியசாலைகளில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் வவுனியா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் பிரிவில் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் நேரடித் தொடர்பு கொண்ட கிளிநொச்சி வைத்தியசாலையில் இருவருக்கும், தருமபுரம் வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.