Tue. May 7th, 2024

நெல்லியடி சந்தை சுபாஸ் பேக்கரி உட்பட 9 பேருக்கு கொரோனா

நெல்லியடி சந்தையில் பணிபுரியும் கரவெட்டி பிரதேச சபை ஊழியர் மற்றும் நெல்லியடி சுபாஸ் பேக்கரியுடன் நேரடித் தொடர்பு கொண்டோர் என 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெல்லியடி சந்தையில் பணிபுரியும் கரவெட்டி பிரதேச சபை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  சுபாஸ் பேக்கரி சாரதி ஒருவர் நோய் அறிகுறிகளுடன் வருகை தந்த போது பரிசோதனை முடிவில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சுபாஸ் பேக்கரி மற்றுமொரு சாரதியின் மனைவி , இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியின் சகோதரிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாரதிக்கு மீளவும் பரிசோதனை செய்ய வேண்டும் என முடிவு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.  உடுப்பிட்டி சுகாதார பரிசோதகர் பிரிவிலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்