நாளை முதல் இரவில் பயணத் தடை
நாளை வியாழக்கிழமை தொடக்கம் திங்கட்கிழமை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் நாடு பூராகவும் பயணத் தடை விதிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சர்வேந்திர சில்வா அறிவித்துள்ளார். இந்த சாதாரண ஊரடங்கின் போது எவரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் குறித்த காலப்பகுதியினுள் அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப் பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.