Sun. May 19th, 2024

நெல்லியடியில் சுகாதார நடைமுறை தொடர்பான சோதனைகள்

12.05.2021.இன்று நெல்லியடி பொதுச் சந்தையில் கொரோனா கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கரவெட்டி சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் எள்ளம்குளம் ராணுவ முகாமை சேர்ந்த ராணுவத்தினரும் ஈடுபட்டு இருந்தார்கள். புதிய சந்தைக்குள் மரக்கறி வியாபாரம் செய்யும் வெங்காய வியாபாரி ஒருவர் மற்றும் வெற்றிலை வியாபாரி ஒருவரையும் சரியானமுறையில் முகக் கவசம் அணியாமல் வியாபாரம் செய்ததாக குற்றம் சுமத்தி 14 நாளைக்கு வியாபாரம் செய்ய முடியாது எனவும் உடனடியாக அவ்விடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.

சந்தை வெளிப்புறத்தில் 750 வீதியில் பயணித்த மினிபஸ் இலங்கை போக்குவரத்து பஸ்கள் பரிசோதனை செய்யப்பட்டது. முகக்கவசம் சரியான முறையில் அணிந்து இருக்கிறார்களா என்பதை பரிசோதனை செய்யப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்