இடமாற்றங்களில் முறைகேடு கவனமெடுக்குமாறு வேண்டுகோள்
அதிபருடன் நல்லுறவு வைத்திருக்கும் ஆசிரியர்களின் இடமாற்றங்களில் முறைகேடு நடப்பதாகவும், இதனை ஆசிரியர் சங்கங்கள் கவனத்தில் எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2014ம் ஆண்டிற்கு முன்னர் வெளிமாவட்டங்களில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் குறித்த கல்வி வலயங்களால் நடைபெற்று வருகின்றன.
இருப்பினும் இதில் பக்கச்சார்பு காணப்படுவதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குற்றம் சுமத்துகின்றனர். குறிப்பாக ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் பலர் அதிபர்களின் செல்வாக்கு காரணமாக ஒரு பாடசாலையில் 8 வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையிலும் இடமாற்றங்களை பெறாமல் அப்பாடசாலைகளிலேயே கடமையாற்றுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே வலயக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கவனமெடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.