Sat. May 18th, 2024

3 மணித்தியாலங்கள் இடைவெளி 50 பவுண் நகை திருட்டு

3 மணி நேரத்தில் 50 பவுண் நகைகள் உட்பட ஒரு கோடி ரூபா பெறுமதியான நகைகளும் பொருட்களும் களவாடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வீடொன்றை உடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளைய அடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் உறவினர் வீட்டுக்குச் சென்று இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பிய இடை 3 மணி நேரத்தில் கொள்ளை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 50 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்