சனசமூக நிலையங்களுக்கு பயிற்சி
UNDP நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் யாழ் சமூக மேம்பாட்டு மையத்தினால் (JSAC) சனசமூக நிலைய நிர்வாகசபை உறுப்பினர்களுக்கு இயலளவு மேம்பாட்டு பயிற்சி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரவெட்டி பிரதேச சபை, பருத்தித்துறை நகர சபை, பருத்தித்துறை பிரதேச சபை, வல்வெட்டித்துறை நகர சபை ஆகியவற்றில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 24 நிர்வாக சபை உறுப்பினர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டது.
சமூக தணிக்கை (social audit), உள்ளூர் திட்டமிடல் (local planning) போன்றவற்றை மையப்படுத்தி முன்னாள் நிர்வாக சேவை அதிகாரி செல்வின் அவர்களால் இப்பயிற்சி வழங்கப்பட்டது.