Tue. May 7th, 2024

3ம் தவணைக்குரிய செயன்முறைப் பரீட்சைகள் 5ம் திகதி முதல் ஆரம்பம்

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 3ம் தவணைக்குரிய தரம்6 முதல் தரம் 10 வரையான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 5ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

தரம் 6 முதல் தரம் 10 வரையான மாணவர்களுக்கு விஞ்ஞானம் மற்றும் அழகியல் பாட செயன்முறைப் பரீட்சைகளே நடைபெறவுள்ளன.
இதில் 5ம் திகதி தரம் 9 மாணவர்களுக்கு விஞ்ஞான பாட செயன்முறை பரீட்சையும், தரம் 10 மாணவர்களுக்கு அழகியல் செயன்முறைப் பரீட்சையும் நடைபெறும்.
6ம் திகதி தரம் 7 மாணவர்களுக்கு விஞ்ஞான பாட செயன்முறை பரீட்சையும், தரம் 8 மாணவர்களுக்கு அழகியல் செயன்முறைப் பரீட்சையும் நடைபெறும்.
14ம் திகதி தரம் 6 மாணவர்களுக்கு விஞ்ஞான பாட செயன்முறை பரீட்சையும், தரம் 9 மாணவர்களுக்கு அழகியல் செயன்முறைப் பரீட்சையும் நடைபெறும்.
15ம் திகதி தரம் 8 மாணவர்களுக்கு விஞ்ஞான பாட செயன்முறை பரீட்சையும், தரம் 7 மாணவர்களுக்கு அழகியல் செயன்முறைப் பரீட்சையும் நடைபெறும்.
16ம் திகதி தரம் 10 மாணவர்களுக்கு விஞ்ஞான பாட செயன்முறை பரீட்சையும், தரம் 6 மாணவர்களுக்கு அழகியல் செயன்முறைப் பரீட்சையும் நடைபெறும் எனவும் மாகாண கல்வித் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்