24 மணித்தியாலத்தின் பின் மழை நின்று விடும்
வங்காள விரிகுடாவில் உருவாகி இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் ஊடாக அரபிக் கடலுக்கு சென்ற தாழமுக்கம் வலுக்குறைந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக இலங்கைக்கு தென்மேற்கே கடற்பகுதியில் காணப்படுகின்றது.
இது அடுத்த 24 மணித்தியாலத்தில் அழிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்த 24 மணி நேரம் வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எனவே விவசாயிகள் உங்களுடைய உங்களுடைய அறுவடை செயற்பாடுகளை அதற்கேற்ப திட்டமிட்டு செயற்படுத்துவது சிறந்தது.
-நாகமுத்து பிரதீபராஜா-