இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த நரசிங்க வைரவர் ஆலயம் விடுவிக்கப்பட்டது
வலிகாமம் வடக்கில் காங்கேசன்துறை J/234 கிராம சேவையாளர் பிரிவில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து நேற்று மாலை விடுவிக்கப்பட்ட பகுதியில் உள்ள நரசிங்க வைரவர் ஆலயம்.
இங்கு யுத்தத்தால் மக்கள் இடம்பெயர்ந்த பின்னர் இராணுவ பொறியியல் பிரிவினர் இங்கு முகாம் அமைத்திருந்தனர். அத்துடன் எந்த சேதமும் இன்றி இராணுவத்தினர் இந்த ஆலயத்தை பராமரித்ததுடன் வைரர், பிள்ளையார், முருகன் துர்க்கை, புத்த பெருமானின் சிலையினையும் வைத்து வழிபாடு செய்துள்ளனர்.
தற்போது காணி விடுவிப்பு செய்தபோது பெரிய புத்த பெருமானின் சிலையினை எடுத்து சென்றுள்ளனர். பழைய விக்கிரகங்கள் அங்கு அப்படியே உள்ளன.
மக்கள் தற்போது இவ் ஆலயத்தினை வந்து பார்வையிட்டு வருகின்றனர்.