Sat. Apr 27th, 2024

23 கோயில்களின் தீர்த்தக்கேணி புனரமைப்பு

வடமராட்சி ஊறணி பிரதேசத்தில் 23 கோயில்களின் தீர்த்தக் கேணி 40 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

வடமராட்சி ஊறணி பகுதியில் உள்ள கேணியின் முதற் கட்ட புனரமைப்பு பணிகள் 23 மில்லியன் ரூபா செலவில் நடைபெற்று இன்னும் இரு கிழமைக்குள் பணிகள் நிறைவடையவுள்ளது.
இப்பிரதேச மக்களின் வேண்டுகோளிற்கிணங்க வல்வெட்டித்துறை நகரசபையால் இத்திட்டம் நடைபெற்று வருகின்றது.
இக்கேணியை அண்டியுள்ள 23 கோயில்கள் தீர்த்தக் கேணியாக பாவிப்பதுடன், இறந்தவர்களுக்கான ஆத்ம சாந்தி கிரியைகள் நடாத்தும் இடமாகவும் அமைகிறது. இக்கேணிக்கு அண்மையில் 5 கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் கடலுக்குள் செல்வதற்காக 140 அடி நீளமும், 25அடி அகலமும் கொண்ட படிக் கட்டுக்களும் அமைக்கப்பட்டு வருகின்றது.  இந்த இடத்தை மக்கள் பொழுபோக்கும் இடமாகவும் மிகவும் கவர்ச்சியாகவும் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்