Sat. Apr 27th, 2024

வெளிநாடு செல்ல கணவனையும் மகனையும் அனுப்பிய யாழைச் சேர்ந்த தாய் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடு செல்ல கணவனையும் மகனையும் அனுப்பிய யாழைச் சேர்ந்த தாய் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி ஏ9 வீதியின் ஆனையிறவுக்கு அண்மித்த பகுதியில் நேற்று புதன்கிழமை (24) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியில் சென்று கொண்டிருந்த எருமை மாடுகளுடன் மோதி, வீதியின் மறுகரைக்கு சென்று, எதிரே வந்து கொண்டிருந்த ஹைஏஸ் வாகனத்துடன் மோதியது.விமான நிலையத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த வாகனமே விபத்துக்குள்ளாகியது.

வெளிநாட்டு செல்லும் கணவரையும் மகனையும் விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டு அந்த வாகனத்தில் யாழ்ப்பாணம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த யாழ் சென்பனடிக்ஸ் வித்தியாலய ஆசிரியையான பாசையூரைசேர்ந்த மார்க் வெஸ்லி அலன் கத்தரின் என்ற மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு சிறுவர்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்களில் மாடுகள் கொண்டு வந்த நபா் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, விபத்தில் 9 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், நான்கு மாடுகள் காயமடைந்துள்ளன. படுகாயமடைந்த மாடுகள் எழுந்து நிற்க முடியாமல் நடுவீதியில் நீண்டநேரமாக கிடந்தது பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்தது.சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்