பரபரப்பான ஆட்டத்தில் ஈவிணை கலைமகள் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
பரபரப்பான ஆட்டத்தில் ஈவிணை கலைமகள் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் தெல்லிப்பளை நாமகள் விளையாட்டுக்கழகம் மாவட்ட ரீதியில் நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட யாழின் நாயகன் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தெல்லிப்பளை நாமகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில்
ஈவிணை கலைமகள் அணியை எதிர்த்து மூளாய் வளர்மதி அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதனை நிரூபிக்கும் முகமாக விளையாடினர்.
இதில் இரு அணிகளும் ஆட்ட நேர முடிவில் 3:3 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தனர். இதனால் சமநிலை தவிர்ப்பு உதைமூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.
இதில் ஈவிணை கலைமகள் அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.