Sat. Apr 27th, 2024

கணபதி அறக்கட்டளையின் 3ம் ஆண்டு நிறைவு விழாவும் துவிச்சக்கர வண்டி மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்

கணபதி அறக்கட்டளையின் 3ம் ஆண்டு நிறைவு விழாவும் துவிச்சக்கர வண்டி மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணிக்கு மாலைசந்தை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

யா/ஹாட்லிக் கல்லூரியின் பகுதித் தலைவரும் கணபதி அறக்கட்டளையின் பணிப்பாளருமான வ.தயாபரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக கரவெட்டி பிரதேச செயலாளர் ஈஸ்வரானந்தன் தயாரூபன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜனனி லதர்ஸன், நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர் க.கிருஸ்ணகுமார், யா/கிளிவெட்டி மகா வித்தியாலய அதிபர் பா.கோணேஸ்வரராஜா ஆகியோரும், கெளரவ விருந்தினர்களாக சமூக சேவையாளரும்,  ஓய்வுநிலை இங்கிலாந்து பேராசிரியருமான சி.சண்முகலிங்கம்,  சமூக சேவையாளர் திருமதி இந்திராணி பாஸ்கரன்,  Green Solar Helding Lanka (pvt) Ltd முகாமையாளர் உ.கோகுலன் , அல்வாய் கிழக்கு கிராம சேவையாளர் எஸ்.பிரதீபன்,  அல்வாய் தெற்கு கிராம சேவையாளர் ஆர்.யாதவன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்