நெல்லியடி, துன்னாலை சமுர்த்தி வங்கிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் மாவட்ட சமுர்த்தி பொங்கல் நிகழ்வும்,
நெல்லியடி, துன்னாலை சமுர்த்தி வங்கிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் மாவட்ட சமுர்த்தி பொங்கல் நிகழ்வும், பரிசளிப்பு விழாவும் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு கரணவாய் மூத்த விநாயகர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாதசுந்தரன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினர்களாக யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, மகளீர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அனுபபஸ்குவல் ஆகியோரும், கெளரவ விருந்தினர்களாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் சி.டி.களுவார்ச்சி, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் எஸ்.சத்தியசீலன், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள குறுநிதிப் பிரிவு பணிப்பாளர் எஸ்.விக்கிரமசிங்க, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள சமூக அபிவிருத்தி உதவிப் பணிப்பாளர் உபாலி புஸ்பகுமார, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள தலைமையக உதவிப் பணிப்பாளர் காமினி அபேக விக்கிரம ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.