Sun. Apr 28th, 2024

வெற்றிலைகேணி பகுதியில் கோர விபத்து மூவர் வைத்தியசாலையில்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடிப் பகுதியில் இரு மோட்டார் சையிக்கிள்கள் விபத்திற்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்து சற்று முன்னர் இரவு 9.30 நடைபெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு கோரியடிப் பகுதியில் முன்னுக்குச் சென்ற பட்டா ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சையிக்கிள் எதிரே வந்த மோட்டார் சையிக்கிளுடன் மோதுண்டதில், மோட்டார் சையிக்கிள்களில் சென்ற இருவரும் பலத்த காயமுற்ற நிலையில் ஒருவர்  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் இருவர் மருதங்கேணி வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் கட்டைக்காட்டைச் சேர்ந்த சுப்பன் யோகேஸ் (வயது 34) என்பவர் கால் முறிந்த நிலையிலும், சேதுராஜன் வாணுஜன் (வயது 22) காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும், வெற்றிலைக்கேணி முள்ளியன் பகுதியைச் சேர்ந்த தில்லையம்பலம் சஜித் (வயது 21), காயமடைந்த நிலையில் மருதங்கேணி வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்