பருத்தித்துறை பிரதேச செயலகத்தின்மரம் நாட்டு விழா
வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தின் மரம் நாட்டு விழா நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தும்பளை மனோன்மணி அம்மன் தேவஸ்தான சூழலில் நடைபெறவுள்ளது.
பருத்தித்துறை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் செ.சுபச்செல்வன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக பருத்தித்துறை பிரதேச செயலக செயலாளர் சி.சத்தியசீலன், சிறப்பு விருந்தினராக நீர்வேலி Green layer Environment Organisation தலைவர் மற்றும் தும்பளை மனோன்மணி அம்மன் தேவஸ்தான தலைவர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.