வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் சங்கிலி அறுப்பு
கோண்டாவில் கிழக்கு நாராயணன் சன சமூக நிலைய பகுதியில் தனியாக இருந்த பெண் ஒருவரின் சங்கிலி அறுத்த திருடனை அடையாளம் காணப்பட்ட நிலையில் திருடன் தலைமறைவாகியதுடன் பொலீஸார் வலை வீசி தேடிவருகின்றனர்.
இச்சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் கோண்டாவில் கிழக்கு நாராயணன் சன சமூக நிலைய பகுதியில் நடைபெற்றுள்ளது.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,
தனித்து பெண் வீட்டில் தங்கியிருந்த நிலையில் இரவு 7 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த சிலர் முகத்தை சேலையால் மூடி, வாயினுள் துணியை அடைத்து சங்கிலியை அறுத்துள்ளனர். அப்பகுதியால் வந்த பேரன் திருடர்களை கண்டு சத்சமிட்டதில் அவர்கள் தப்பிச்சென்றதாக தெரியவந்துள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த ஒருவருரின் துணையுடனேயே இச்செயல் நடந்ததாக தெரியவந்ததையடுத்து அப்பகுதி மக்களால் சந்தேகத்திற்கு இடமான வீடு சேதமாக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அதனை கட்டுப்படுத்த பொலீஸார் நடவடிக்கையை விரைந்து செயற்படுத்துமாறும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.